திமுக தலைவரும் மாண்புமிகு முதல்வருமாகிய மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் ஒப்புதலோடு திருப்பூர் வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளராக செ. திலக்ராஜ் அவர்களை நியமனம் செய்துள்ளதாக
திமுக மாணவர் அணி மாநில செயலாளர் சி. வி.எம்.பி.எழிலரசன் எம், எல், ஏ, அவர்கள் அறிவித்துள்ளார்.
செ.திலகராஜ் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் மகன் ஆவார் மேலும் இவர் சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் இயலாதோருக்கு தயங்காமல் உதவி கரம் நீட்டுவார். விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு தயங்காமல் முதல் ஆளாக நின்று உதவி செய்வார் மேலும் கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு பொருட்களை வழங்கி யும் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment