அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திமுக வேட்பாளர் பலாப்பழத்துடன் வேட்பு மனு தாக்கல் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 April 2026

அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திமுக வேட்பாளர் பலாப்பழத்துடன் வேட்பு மனு தாக்கல்


நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கட்சியின் நிறுவனத் தலைவர் பொது செயலாளர் வி செந்தில் குமார்(வி எஸ் கே) அவர்கள் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் 234 தொகுதிகளிலும் ஒரே சின்னமான பலாப்பழம் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அந்த வகையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் எம் பி அமீத் அவர்களிடம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மூன்றாவது மண்டலம் 45 வது வார்டு 21/3 அகத்தியர் சந்து திருப்பூர் காட்டன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த விஜயகுமார் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad