அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று திருப்பூர்
பிரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்றது வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவதற்கான கருத்துக்கணிப்பு நடைபெற்றது நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துகளை கொண்டு வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவது என சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளின் படி இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தலைவர் ஜி.கே.விவசாய மணி தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மாநில இயற்கை வேளாண்மை பிரிவு தலைவர் முத்துசாமி மாநில சங்க பேச்சாளர் சந்திரசேகரன் தலைமை நிலைய செயலாளர் நாகேந்திரன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் குருநாதன் மூலனூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி அன்னூர் ஒன்றிய தலைவர் குருசாமி தாராபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் இரமேஷ் குமார் ஒண்ணாவது மண்டல மகளிர் அணி தலைவி வீரலட்சுமி தெக்கலூர் ஊராட்சி நிர்வாகி மஞ்சுளா அவிநாசி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ் ஒன்னாவது மண்டல செயலாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழகப் குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment