உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தவெக சார்பில் உணவு வழங்கப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 May 2026

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தவெக சார்பில் உணவு வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்கள், துப்புரவு பணியாளர்கள், யாசகம் கேட்பவர்கள் உள்ளிட்ட 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுரேஷ், ஆட்டோ முஜி, நல்லசாமி , ஜாபர், சிதம்பரம்,கவியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad