சூரியநல்லூர் அருகே 8 வயது சிறுமியை நாய் கடித்ததில் அதிக காயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 June 2026

சூரியநல்லூர் அருகே 8 வயது சிறுமியை நாய் கடித்ததில் அதிக காயங்களுடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.



 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள சூரியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சிவகாமி என்பவருடைய மகள் தன்சியா வயது 8 இவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அருகே உள்ள கருவேலன் தோட்டம், வெங்கிடுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த நாய் ஒன்று, அப்பகுதி வலியை தன்ஷிகா நடந்து சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த நாய் தன்சிகாவை கடித்து குதறியது.பின்னர் தன்ஷிகாவிற்கு கை கால் தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக காயங்கள் ஏற்பட்டன. பின்னர் தன்ஷிகா எழுந்து அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்களை சத்தமிட்டதில் உடனடியாக சம்பவத்தைக்கு வந்து உறவினர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தன்சிகா மருத்துவ பரிசோதனை செய்து அதிக காயங்கள் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் இது குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad