எஸ் டி பி ஐ (SDPI )கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சிறப்பு செயற்குழு கூட்டம் (26-5-2026) அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
SDPI கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் பசீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஹாஜி. இதயத்துல்லாஅவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட பொது செயலாளர் அப்துல் வகாப் மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக் மாவட்ட செயலாளர் அக்பர் அலி மாவட்ட பொருளாளர்
ஜாபீர் அகமது மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. கேன். பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது யாசின் நன்றி உரையாற்றினார் தெற்கு தொகுதி தலைவர் அன்வர் பாஷா காங்கேயம் தொகுதி தலைவர் திப்புசுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
ஜூன் 14ஆம் தேதி நடைபெறுகின்ற தேசிய தலைவர் M. K.ஃபைஜி அவர்கள் பங்குபெறும் தலைவர்கள் மாநாட்டிற்கு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 21ம் தேதி கட்சியினுடைய துவக்க தினத்தை முன்னிட்டு கட்சியினுடைய கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்டம் தொகுதி வாரியாக நடத்துவது
ஜூன் 21 ஆம் தேதி அரசியல் பயிலரங்கம் மாவட்டத்தின் சார்பாக நடத்துவது
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:
Post a Comment